டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன்(61), பின் ஆலன்(32) ரன்கள் குவித்தனர். அயர்லாந்து அணியில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் உட்பட 3 விக்கெட் வீழ்த்தினார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. பால் ஸ்டிர்லிங்(37) மற்றும் பால்பிரின்(30) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே அடித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்களும், இஷ் சொதி, டிம் சௌதி மற்றும் மிட்சேல் சாண்ட்னர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை ப்ரகாசப்படுத்தி இருக்கிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…