#T20 World Cup 2022: டி-20 உலகக்கோப்பையில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர்.!

Default Image

டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் ரூஸோவ்.

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர்:                                                     வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் சதமடித்த ரூஸோவ் டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தென்னாப்பிரிக்க வீரராக டி-20 உலகக்கோப்பையில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இந்த சீசனில் சதமடித்த முதல் வீரர் ரூஸோவ் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய வெற்றி:                                      வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருடம் டி-20 உலகக்கோப்பை தொடரின் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே பெரிய வெற்றியாக இருந்தது.

மேலும் தென்னாப்பிரிக்கா டி-20 உலகக்கோப்பை தொடரின் இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோரை (205 ரன்கள்) அடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்