கொரோனா சோதனையில் தொற்று உறுதியானாலும், டி-20 உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தோற்று ஏற்பட்ட காரணத்தால் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த இந்த டி-20 உலககோப்பைத்தொடர் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள இந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐசிசி தற்போது கொரோனா குறித்து ஒரு முடிவை அறிவித்துள்ளது.
டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் வீரர்களுக்கு கொரோனா சோதனையில் தொற்று உறுதி என வந்தாலும் அவர்கள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் வீரர்களுக்கு தொடரின் இடையில் எந்தவித கொரோனா சோதனையும் எடுப்பதற்கு கட்டாயப்படுத்த மாட்டாது என்றும், வீரருக்கு கோவிட்-19 உறுதியானால் அவரைத் தனிமைப்படுத்தும் காலம் இருக்காது என்றும் தெரிவித்தது. மருத்துவர்கள் வீரரின் உடல்நிலையை மதிப்பிட்டு கூறும் அறிவுரையின் படியே வீரர் தொடர்ந்து விளையாடுவார் என்று ஐசிசி அறிவித்தது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…