டி-20 உலகக்கோப்பை தொடரின் 5 ஆவது போட்டியில், நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில், இன்று நடைபெற்ற 5 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக ஃபிரைலின்க் 43 ரன்கள் அடித்தார். நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
122 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி,19.3 ஓவர்களில் 5 விக்கெட் மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. நெதர்லாந்து அணியில், விக்ரம்ஜித் சிங் 39 ரன்களும், மேக்ஸ் ஓ’டௌட் 35 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…