T20 World Cup 2021:”ஐசிசி டி-20 போட்டியின் நான்கு அரையிறுதி போட்டியாளர்கள் இவர்கள்தான்” – ஆகாஷ் சோப்ரா அசத்தல் அறிவிப்பு..!

Published by
Edison

ஐசிசி டி 20 உலகக் கோப்பை(T20 World Cup 2021) போட்டிக்கான நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களை ஆகாஷ் சோப்ரா முன்னறிவித்துள்ளார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா உலகளாவிய போட்டிக்கான நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். மெகா ஐசிசி உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது.

இந்நிலையில்,மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நான்கு அணிகள் கடைசி நான்கு இடங்களை பிடிக்கும் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.. டிவிட்டரில் நடந்த கேள்வி-பதில் அமர்வின் போது, டி 20 உலகக் கோப்பைக்கான தனது அரையிறுதிப் போட்டியாளர்களைத் தேர்வு செய்யுமாறு ஒரு ரசிகர் கேட்டபோது அவர் இதனைக் கணித்தார்.

அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி, மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட இந்திய அணியா? என்று சோப்ராவிடம் மற்றொரு ரசிகர் கேட்க, சஹார் மற்றும் வருணுக்கு இடையே ஒரு டாஸ்-அப் இருக்கலாம் என்றும் ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் அணியில் உறுதியாக இருப்பதாகவும் சோப்ரா கணக்கிட்டார்.

  

இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் சூப்பர் 12 இன் குரூப் 1 இல் இடம் பெற்றுள்ளன, இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் 2 இல் இடம் பெற்றுள்ளன.

 

அதன்படி,அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் போட்டியைத் தொடங்குகின்றன. இரு தரப்பினரும் வெற்றியைத் தொடங்க விரும்புகிறார்கள். இங்கிலாந்தில் 2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் பின்னர் இரு அணிகளும் மோதிக் கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

5 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

6 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

6 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

7 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

8 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

9 hours ago