நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,சூப்பர் 12 குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கப்டில், டேரில் மிட்செல் களமிறங்கி நிதானமாக விளையாடினர்.
ஆனால்,18 ரன்கள் எடுத்த நிலையில் கப்டில் 4 வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற,கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இதற்கிடையில்,டேரில் மிட்செல் 6 வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து,இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து அதிராடியாக விளையாடி வந்த கேப்டன் வில்லியம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில், ஈராஸ்மஸ் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின்னர்,இறங்கிய கான்வே ரன் அவுட் ஆக,கிளென் பிலிப்ஸ், நீஷம் களமிறங்கி அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இறுதியில்,20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.கிளென் பிலிப்ஸ் 39*,நீஷம் 35*.
நமீபியா அணியை பொறுத்தவரை ஷால்ட்ஸ்,வைஸ்,எராஸ்மஸ் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…