நியூசிலாந்து அணி20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.இதனால்,ஸ்காட்லாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,குரூப் 2 இல் உள்ள நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியானது,துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி,டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.இதனால்,நியூசிலாந்து அணி பேட்டிங் இறங்கியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்டில் மற்றும் டேரில் மிட்செல் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்த நிலையில்,டேரில் 13 ரன்களில் எல்பிடபுள்யு ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் டக் அவுட் ஆன நிலையில்,அதன்பின்னர் இறங்கிய கான்வே 1 ரன்னில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அவர்களை தொடர்ந்து,களம் கண்ட க்ளென் பிலிப்ஸ் நிதானமாக விளையாடி அணிக்கு மேலும் ரன்களை சேர்த்தார்.ஆனால்,33 ரன்கள் எடுத்த நிலையில் 18 வது வரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.6 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடித்து அதிரடியாக விளையாடி 93 ரன்கள் எடுத்த கப்டிலும் 18 வது ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில்,20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.நீஷம் 10* ரன்கள்,சான்ட்னர் 2* ரன்கள்.
ஸ்காட்லாந்து அணியைப் பொறுத்தவரை சஃப்யான் ஷெரீஃப்,வீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…