இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இன்றைய முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி20 தொடரில் உலகக்கோப்பையில் விளையாடிய அனைத்து மூத்த வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணியில் உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் இந்த டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி:
டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(கேப்டன் /விக்கெட் கீப்பர்), சீன் அபோட், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹரன்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன் ஆரோன் ஹார்டி ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
இந்திய அணி:
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட் , ஜிதேஷ் சர்மா ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…