T20: தோனி இடத்தை நிரப்பிய ரிஷாப் பந்த் ! தொடரை கைப்பற்றிய இந்தியா !

Published by
murugan

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார்.

இதை தொடர்ந்து  பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக லூயிஸ் , சுனில் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே லூயிஸ் 10 , சுனில் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

ImageImage

பிறகு இறங்கிய ஹெட்மேயர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பரிதாபமான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை  பொல்லார்ட் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 58 ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

பின்னர் இறங்கிய  பூரன் 17 , ப்ரத்வேய்ட் 10 , ரோவ்மன் பவல் 32 ரன்களுடன்  நடையை கட்டினார்கள். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது.

ImageImage

இந்திய அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்டுகள் ,சைனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.

வந்த வேகத்தில் ஷிகர் தவான் 3 ரன்னுடன் வெளியேற  பிறகு விராட் கோலி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 20 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் விராட் கோலி , ரிஷாப் பந்த் இருவரும் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ImageImage

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் நிறைவு செய்தனர்.  பின்னர் கோலி 59 ரன்னில் அவுட் ஆனார். தோனியின் இடத்தை நிரப்ப வேண்டிய ரிஷாப் பந்த் கடைசி இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால் இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ரிஷாப் பந்த் 65 ரன்களுடன் நின்றார். இறுதியாக இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிலும் வெற்றி பெற்று உள்ளது.இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.நாளை இந்த இரு அணிகளுக்கும் முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது.

Published by
murugan

Recent Posts

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

23 minutes ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

59 minutes ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

1 hour ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

2 hours ago

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

14 hours ago