ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாம் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 3-ஆம் டெஸ்டில் விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனையடுத்து மூன்றாம் டெஸ்ட் போட்டி, சிட்னியில் வரும் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ்க்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்கு பதில் யாக்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இவரின் அதிரடியான பந்துவீச்சு, இந்திய அணிக்கு கூடுதலாக பலம் சேர்க்கவுள்ளது. 18 பேர் கொண்ட டெஸ்ட் தொடரில் நடராஜன் மற்றும் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆம் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…