ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் விளையாடவேண்டும் – தினேஷ் சண்டிமால்

Default Image

இந்திய ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ், இடம்பெற வேண்டும், அவரை எதிர்கொள்வது சவாலானது என்று சண்டிமால் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சூர்யகுமார் யாதவ், டி-20 போட்டிகளில் எதிரணியை கலங்கடித்து வருகிறார், இந்தியாவின் 360 டிகிரி வீர்ர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் ஒருநாள் அணியிலும் சூர்யகுமார் இடம்பெறவேண்டும் என முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் கூறியுள்ளார்.

சூர்யகுமார் நடுவரிசையில் இறங்கி 30-50 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர், இதில் சூர்யகுமார் யாதவ், மற்ற வீரர்களைக் காட்டிலும் சற்று வேறுபட்டவர். ஒருநாள் போட்டிகளில் அவர் வேகமாக ரன்கள் அடிக்கும்போது, அது எதிரணிக்கு சவாலானது, மேலும் விரக்தியை ஏற்படுத்தும், என தினேஷ் சண்டிமால் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்