விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்!

Published by
பாலா கலியமூர்த்தி

சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த உடனே, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒதுக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான களமிறங்கிய இளம் அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் மூலம் டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இதில், நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால், அடுத்த போட்டியில் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 55 இன்னிங்ஸ்களில் 1985 ரன்களை எட்டியுள்ள சூர்யகுமார் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை சமன் செய்வார்.

2 ஆண்டுக்கு பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைக்கவுள்ளார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டர் தரவரிசையில் இருக்கும் சூர்யகுமார், தற்போது நட்சத்திர வீரரான விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

அதாவது, சர்வதேச டி20  கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற இன்னும் 15 ரன்கள் மட்டுமே உள்ளது.  56 போட்டிகளில் மைல்கல்லை எட்டிய கோலியின் இந்த சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இருக்கிறார். டி20 போட்டிகளில் தலா 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை எட்டிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சர்வதேச சாதனை படைத்துள்ளனர். பாபர், ரிஸ்வான் மற்றும் கோலியுடன் ஒப்பிடுகையில், சூர்யாவின் பேட்டிங் நிலை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

20 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

24 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

38 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

50 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

2 hours ago