சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

Published by
அகில் R

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இந்திய அணி, நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பையில் தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். இதன் மூலம் 2-வது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த இறுதி போட்டியில் இறுதி ஓவரில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ், டேவிட் மில்லர் அடித்த பந்தை அபாரமாக பவுண்டரி எல்லையில் நின்று கேட்ச் பிடித்திருப்பார்.

இந்த கேட்ச் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்கும். இந்த கேட்ச்சானது பவுண்டரி எல்லையில் மிக துல்லியமாக சூரியகுமார் யாதவ் பிடித்திருப்பார். இது பலதரப்பு நாடுகளின் ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். அதில் குறிப்பாக தென்னாபிரிக்கா நாட்டின் ஊடகங்கள் இதை மிகவும் சர்ச்சையாக பேசி வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டின் ஊடகம் ஒன்று இதே போல சந்தேகத்தை கிளப்பும் வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் சுட்டி காட்டி இருக்கிறார். அவர் கூறுகையில், “இறுதிப் போட்டியில் டேவிட் மில்லரின் கேட்ச்சை சூர்யகுமார் பிடித்தது சரியானது தானா? என ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த கேட்ச் குறித்த வீடியோக்களில் சூர்யகுமார் யாதவ் தன்னை கட்டுப்படுத்தி நிலை நிறுத்திக் கொண்டு பந்தை பிடித்திருப்பார்.

மேலும், அந்த கேட்ச் குறித்து யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால், அந்த செய்தியை எழுதிய செய்தியாளர் மட்டும் கேள்வி எழுப்புகிறார். அவர் ஆஸ்திரேலிய அணி செய்த பத்து அப்பட்டமான ஏமாற்று வேலைகள் (Top 10 Blatant Cheats by the Australian Team) என்ற வீடியோவை பார்க்க யூடியூபில் பார்க்கலாம் என்று நினைக்கிறன். அதை பார்த்த பின்பு சூர்யகுமார் யாதவை பற்றி கூறலாம்”, என்று கடுமையாக விமர்சனம் செய்தார் சுனில் கவாஸ்கர்.

Published by
அகில் R

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

3 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

3 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

4 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

5 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

5 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

7 hours ago