இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளதாக பொல்லார்ட் கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது அதிகபட்சமாக படிக்கல் 74 ரன்கள் அடித்தார்.
அடுத்ததாக 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடினார். எங்கள் அணியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அணியை கொண்டு சென்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால் அவருக்கான வெகுமதி கண்டிப்பாக கிடைக்கும். இந்திய அணியில் அவரை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…
சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…