ஏமாற்றத்தில் உள்ளார் சூர்ய குமார்… பொல்லார்ட் ஓபன் டாக்..!

Default Image

இந்திய அணியில் சூர்ய குமார் யாதவை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளதாக  பொல்லார்ட் கூறியுள்ளார். 

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. முதலில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது அதிகபட்சமாக படிக்கல் 74 ரன்கள் அடித்தார்.

அடுத்ததாக 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடினார். எங்கள் அணியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அணியை கொண்டு சென்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால் அவருக்கான வெகுமதி கண்டிப்பாக கிடைக்கும். இந்திய அணியில் அவரை தேர்வு செய்யாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay