சூப்பர் 8 சுற்றால் இந்திய அணிக்கு ஆப்பு தான்! இதுதான் காரணம் ..!!

Published by
அகில் R

டி20I: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின், நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் விளையாடும் இந்திய அணி உட்பட பல அணிகளுக்கு பிரச்சனை நிலவும் சூழ்நிலை உள்ளது.

இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைதற்கு முன்பே சூப்பர் 8 சுற்றில் விளையாட  போகும் 8 அணிகள் யார் யார் என்று தெரிந்துவிட்டது. இந்த அணிகளை தற்போது 2 பிரிவுகளாக பிரித்து அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்று என்பது நடைபெற இருக்கிறது.

நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும், இரண்டாம் பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த சூப்பர் 8 சுற்றானது வருகிற ஜூன்-19 ம் தேதி தொடங்குகிறது, அதில் முதல் போட்டியாக அமெரிக்கா அணியும் தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளனர்.

தற்போது இந்த சூப்பர் 8 சுற்று பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது, அது என்னவென்றால் இந்த சூப்பர் 8 சுற்றுகளில் நடைபெறும் போட்டிகள் அனைத்துமே வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 4 மைதானங்களில் தான் நடைபெறும்.  இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களில் தற்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிலும், வருகிற 24ம் தேதி அன்று செயின்ட் லூசியாவில் நடைபெற இருக்கும் இந்திய-ஆஸ்திரேலியா அணிகள் விளையாட இருக்கும் போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால் இந்த 2 அணிகளுமே பெரிய அளவில் சிக்கலை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஏற்கனவே லீக் போட்டிகளில் பல போட்டிகள் மழையின் காரணமாக போட்டிகளை ஐசிசி கைவிட்டது. அதுவே பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளானது. தற்போது, சூப்பர் 8 சுற்றிலும் இப்படி நடந்தால் பெரிய பெரிய அணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. சூப்பர் 8 சுற்றுகளிலும் மழையால் போட்டி கைவிட்டால் 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை வழங்குவார்கள்.

இதனால், புள்ளிப்பட்டியலிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அணி லீக் போட்டியிலேயே ஒரு போட்டியை மழையின் காரணமாக தவறவிட்டனர் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சூப்பர் 8 சுற்றில் அப்படி நடந்தால் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என  இந்திய அணி ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

22 mins ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

45 mins ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

1 hour ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

1 hour ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

1 hour ago

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…

2 hours ago