கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 22 ஆம் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதியது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கலைமற்ங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ரன்கள் அடித்தது.
இதில் அதிகபட்சமாக பைர்ஸ்டோவ் 97 ரன்களும், வார்னர் 52 ரன்கள் அடித்தனர். 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க அகர்வால் களமிறங்கினார்கள். 9 ரன்களில் மயங்க அகர்வால் வெளியேறினார்.
அவரையடுத்து களமிறங்கிய சிம்ரன் சிங் 11 ரன்களில் வெளியேற, ராகுலும் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரண் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஷீத் கானின் பந்துவீச்சை தாங்காமல் 77 ரன்களில் அவர் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக 16.3 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் அடித்து 69 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் தலா 3 விக்கெட்களும், டி.நடராஜன் மற்றும் கலீல் அஹமத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…