ரஷீத் கானின் அடுத்தடுத்த விக்கெட்களால் அபார வெற்றியடைந்த ஹைதராபாத்!

Default Image

கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 22 ஆம் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதியது.

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கலைமற்ங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ரன்கள் அடித்தது.

இதில் அதிகபட்சமாக பைர்ஸ்டோவ் 97 ரன்களும், வார்னர் 52 ரன்கள் அடித்தனர். 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – மயங்க அகர்வால் களமிறங்கினார்கள். 9 ரன்களில் மயங்க அகர்வால் வெளியேறினார்.

அவரையடுத்து களமிறங்கிய சிம்ரன் சிங் 11 ரன்களில் வெளியேற, ராகுலும் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரண் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஷீத் கானின் பந்துவீச்சை தாங்காமல் 77 ரன்களில் அவர் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக 16.3 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் அடித்து 69 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் தலா 3 விக்கெட்களும், டி.நடராஜன் மற்றும் கலீல் அஹமத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்