rohit paudel fight [file image]
டி20 உலகக்கோப்பை 2024 : ஜூன் 17 -ஆம் தேதி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணியும் வங்காளதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியில் நேபாளத்திற்கு எதிராக வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் நேபாள கேப்டன் ரோஹித் இடையேயான வாக்கு வாதம் பெரிய அளவில் பேசும்பொருளாகி இருக்கிறது. நேபாளம் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் மற்றும் அனில் சாஹ் ஆகியோரை ஏற்கனவே வெளியேற்றிய டான்சிம் ரோஹித்துக்கு எதிராக இரண்டு டாட் பால்களை எடுத்தார்.
எனவே, நேபாளம் அணி 107 ரன்களைத் துரத்திய மூன்றாவது ஓவரில், ஓவர் முடிந்ததும், டான்சிம் மற்றும் ரோஹித் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைக்க தொடங்கினார்கள். பின் இருவரும் நேருக்கு நேர் கோபத்துடன் வந்து உனக்கு என்ன பிரச்சனை என்ன என்ன? என முறைத்துக்கொண்டு மோதிக்கொண்டனர். பின் சண்டை முற்றிவிடக்கூடாது என அக்கம் பக்கத்தில் இருந்த வீரர்கள் மற்றும் களத்தில் இருந்த நடுவர் வேகமாக வந்து தலையிட்டு சண்டை போடவேண்டாம் என அட்வைஸ் கொடுத்து பிரித்து வைத்தனர்.
நடுவர்கள் வந்து சொன்ன பிறகு இருவருமே சைலண்டாக அப்டியே திரும்பினார்கள். இருப்பினும் திடிரென இருவரும் களத்தில் நின்று கொண்டு இருக்கும்போதே வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…