டி20 உலகக்கோப்பை 2024 : ஜூன் 17 -ஆம் தேதி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணியும் வங்காளதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியில் நேபாளத்திற்கு எதிராக வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் நேபாள கேப்டன் ரோஹித் இடையேயான வாக்கு வாதம் பெரிய அளவில் பேசும்பொருளாகி இருக்கிறது. நேபாளம் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் மற்றும் அனில் சாஹ் ஆகியோரை ஏற்கனவே வெளியேற்றிய டான்சிம் ரோஹித்துக்கு எதிராக இரண்டு டாட் பால்களை எடுத்தார்.
எனவே, நேபாளம் அணி 107 ரன்களைத் துரத்திய மூன்றாவது ஓவரில், ஓவர் முடிந்ததும், டான்சிம் மற்றும் ரோஹித் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைக்க தொடங்கினார்கள். பின் இருவரும் நேருக்கு நேர் கோபத்துடன் வந்து உனக்கு என்ன பிரச்சனை என்ன என்ன? என முறைத்துக்கொண்டு மோதிக்கொண்டனர். பின் சண்டை முற்றிவிடக்கூடாது என அக்கம் பக்கத்தில் இருந்த வீரர்கள் மற்றும் களத்தில் இருந்த நடுவர் வேகமாக வந்து தலையிட்டு சண்டை போடவேண்டாம் என அட்வைஸ் கொடுத்து பிரித்து வைத்தனர்.
நடுவர்கள் வந்து சொன்ன பிறகு இருவருமே சைலண்டாக அப்டியே திரும்பினார்கள். இருப்பினும் திடிரென இருவரும் களத்தில் நின்று கொண்டு இருக்கும்போதே வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில் கீழே விழுந்தார் பாடிகார்ட்.. ஒரே அடியில்…
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…