Cricket Breaking: சுப்மான் கில் அதிரடி சதத்தால் இந்திய அணி 234 ரன்கள் குவிப்பு

Default Image

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி-20 போட்டியில் சுப்மான் கில்லின்  அதிரடி சதத்தால் 234 ரன்கள் குவிப்பு.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், சுப்மான் கில் களமிறங்கினர்.இஷான் கிஷன் 1 ரன்னிற்கு ஆட்டமிழக்க சுப்மான் கில் தனது அதிரடி ஆட்டத்தால் 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார் இதில்  7 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின்னர் ராகுல் திரிபாதி தனது பங்கிற்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , சூர்யகுமார் யாதவ்(24) மற்றும் ஹர்திக் பாண்டியா(30) எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி: ஷுப்மான் கில், இஷான் கிஷன் (W), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (C), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே (W), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (C), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்