Stephen Pluming explains about CSK's new captain [file image]
CSK: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. இந்த சூழல், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது.
ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக 5 சாம்பியன் கோப்பைகளை வென்ற தோனி, கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு விட்டுகொடுத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, சென்னை அணியின் எதிர்காலத்தை கருதி கேப்டன் பொறுப்பை இளம் வீரரான ருதுராஜிடம் ஒப்படைத்துள்ளார் எம்எஸ் தோனி. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம்.
தற்போது ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ரவீந்திர ஜடேஜா முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார் என விளக்கமளித்தார். மேலும், இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் எம்எஸ் தோனி விளையாடுவார் என நான் நம்புகிறேன் எனவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டீபன் பிளமிங் பதிலளித்தார். இதனிடையே, எம்எஸ் தோனி கேப்டன் பதவியை ருதுராஜிடம் ஒப்படைப்பது குறித்து கேப்டனின் போட்டோஷூட்டுக்கு சற்று முன்புதான் அறிந்தேன் என சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…