உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை ஆகிய இரு அணிகளும்மோதி வருகிறது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடங்க வீரர்களாக கருணாரட்னே, திரிமன்னே ஆகிய இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் திரிமன்னே 4 ரன்னில் வெளியேறினார்.பின்னர் குசால் பெரேரா களமிறங்கினர்.கருணாரட்னே , குசால் பெரேரா இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.இவர்களின் கூட்டணியை நியூஸிலாந்து அணி சில ஓவரில் தகர்த்தது.
அதனால் குசால் பெரேரா 29 ரன்னில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய அடுத்தடுத்த வீரர்கள்
வீரர்கள் | ரன்கள் | பந்து | பவுண்டரி | சிக்ஸர் |
குசன்ஸ் மெண்டிஸ் | 0 | 1 | 0 | 0 |
தனஞ்சய டி சில்வா | 4 | 13 | 1 | 0 |
ஏஞ்சலோ மேத்யூஸ் | 0 | 9 | 0 | 0 |
ஜீவன் மெண்டிஸ் | 1 | 4 | 0 | 0 |
திசார பெரேரா | 27 | 23 | 0 | 2 |
இசரு | 0 | 3 | 0 | 0 |
சுரங்க லக்மால் | 7 | 13 | 1 | 0 |
லசித் மலிங்கா | 1 | 2 | 0 | 0 |
இறுதியாக இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர்.நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார்.நியூஸிலாந்து அணி 137 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளனர்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…