இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையில் கடைசி டி20 போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியில் தொடக்க வீரராக தவான், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.
தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய, பாடிக்கல், 9 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 82 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர் அடுத்ததுடுத்து அவிஷ்கா பெர்னாண்டோ 12 , பானுகா 18 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா சிறப்பாக விளையாடினர்.
இறுதியாக இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…