இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி..!

Published by
murugan

இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையில் கடைசி டி20 போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியில் தொடக்க வீரராக தவான், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய, பாடிக்கல், 9 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 82 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர் அடுத்ததுடுத்து அவிஷ்கா பெர்னாண்டோ 12 , பானுகா 18 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா சிறப்பாக விளையாடினர்.

இறுதியாக இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Published by
murugan
Tags: SLvIND

Recent Posts

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

47 minutes ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

60 minutes ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

2 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

3 hours ago