#SLvIND: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற இலங்கை..!

Published by
murugan

இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 13 ரன்களில் வெளியேற பின்னர் சஞ்சு சம்சன் களமிறங்கினார். சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தாசுன் ஷானகா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில்  மனிஷ் பாண்டே 11 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 4 பவுண்டரி அடித்து 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 225 ரன்கள் எடுத்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால், இலங்கை அணிக்கு 227 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக  அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மினோட் பானுகா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து பானுகா ராஜபக்சே, அவிஷ்கா உடன் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பானுகா ராஜபக்சே, அவிஷ்கா இருவரும் அரைசதம் விளாசினர். நிதானமாக விளையாடிய பானுகா ராஜபக்சே 65 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தனஞ்சய டி சில்வா 2 ரன் எடுத்து சேத்தன் சகாரியாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களம் கண்ட தசுன் ஷானகா ரன் எடுக்காமல் மனிஷ் பாண்டேவிடம் கேட்சை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அவிஷ்கா பெர்னாண்டோ 76 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 227ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்திய அணியில் ராகுல் சாஹர் 3 , சேத்தன் சகாரியா 2,  ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம்  தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

நடந்து முடிந்த 3 போட்டியில் 2 போட்டியில் இந்திய அணியும், 1 போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago