இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.
இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று ஆர்.பிரமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர்.
முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 133 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர். 3 வது ஓவரில் அவிஷ்கா புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை ராகுல் சஹாரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.
பின்னர், களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 8, தசுன் ஷானகா 3 ரன் எடுத்து நடையை காட்டினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மினோட் பானுகா 36 ரன்னில் ராகுல் சஹாரிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து இறங்கிய வாணிந்து ஹசரங்கா 15 , ரமேஷ் மெண்டிஸ் 2 ரன் எடுக்க தனஞ்சய டி சில்வா கடைசிவரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். களத்தில் தனஞ்சய டி சில்வா 40 * ரன்களுடன் இருந்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2, புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார், சேதன் சாகரியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை பறித்தனர். நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…