ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தடுமாற்றத்தை கண்டு தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்லும் நினைத்தபடி விளையாடவில்லை. 14 ரன்களிலேயே வெளியேறினார்.
அதேபோல் ஐடன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட்டானார். இதுவே அதிகபட்ச தனிநபர் ரன்னாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூரான் மற்றும் தீபக் ஹூடா வழக்கம்போல் ஒரு சில ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தனர்.
ஹைதராபாத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…