இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 15-ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மற்றும் கேஎஸ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஐதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனிடையே, ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் 6-வது இடத்தில உள்ளது. இதுபோன்று ஒரே ஓர் போட்டி மட்டுமே விளையாடியுள்ள ஐதராபாத் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. எனவே, ஐதராபாத் வெற்றி பாதைக்கு திரும்புமா அல்லது மீண்டும் லக்னோ அணி வெற்றி வாகை சூடுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ரொமாரியோ ஷெப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…