#IPL2022: டெத் ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய உம்ரான் மாலிக்.. ஹைதராபாத் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் சூப்பர் சண்டே ஆன இன்று பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மயங்க அகர்வால் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இன்று அணியின் கேப்டனாக ஷிகர் தவான் பொறுப்பேற்றார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் – ப்ரப்சிம்ரன் களமிறங்கினார்கள். நிதானமான தொடக்கத்தை தொடங்கிய தவான், 8 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 12 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேற, லிவிங்ஸ்டன் களமிறங்கினார். மறுமுனையில் 11 ரன்கள் எடுத்து ஜிதேஷ் சர்மா வெளியேற, அவரையடுத்து சிறப்பாக ஆடிவந்த ஷாருக்கான், 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் பஞ்சாப் அணி, 19 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. அதன்படி கடைசி ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். இரண்டாம் பந்திலே ஓடியன் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த, 4,5 மற்றும் 6-வது பந்துகளில் ஹட்-ட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல், 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இறுதியாக பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் எடுத்தது. தற்பொழுது 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Published by
Surya

Recent Posts

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

37 minutes ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

1 hour ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

2 hours ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

2 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

2 hours ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

3 hours ago