நம்பிக்கையை இழக்கவில்லை -ஐபிஎல் இறுதிப் பட்டியலில் இடம் பெறாத நிலையில் ஸ்ரீ சாந்த் விளக்கம்

Published by
Venu

தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னையில் இதற்கான ஏலம் நடைபெறுகிறது.ஐபிஎல் ஏலத்திற்காக மொத்தம் 1,114 கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்தனர், இருப்பினும், 8 ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் பட்டியலிடப்பட்ட வீரர்களை சமர்ப்பித்த பின்னர் 292 வீரர்களை கொண்ட பட்டியல் வந்தது. பிசிசிஐ  வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள், மற்றும் அசோசியேட் நேஷனின் 3 வீரர்கள் ஏலத்தில் விடப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வருகின்ற 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 2021 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்திற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் பதிவு செய்தார்.ஆரம்ப விலை ரூ.75 லட்சம் என்று பதிவு செய்திருந்தார்.அவரது பதிவு யாரையும் ஈர்க்கவில்லை.கேரளாவை சேர்ந்த ஸ்ரீ சாந்த் கடைசியாக கடந்த 2013-ஆம்  ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். பின்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்கப்பட்டது.தற்போது அந்த தடை நீங்கியுள்ளது.

இதற்கிடையில்,ஐபிஎல்  கிரிக்கெட் வீரர்களின் இறுதி பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றாலும் ஸ்ரீ சாந்த் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.தனது இன்ஸ்டாகிராம்  ஸ்ரீசாந்த் பதிவிட்டுள்ள வீடியோவில் , தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.கற்பனையின் எந்தவொரு நீட்டிப்பினாலும் தான் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும், மீண்டும் வருவதற்கு கடினமான  முயற்சியை மேற்கொள்வேன் என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago