BCCITroll [Image source: file image ]
மைதானத்தை மழைநீரை வெளியேற்ற பஞ்சு போன்றவற்றை பயன்படுத்திய பிசிசிஐயை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சென்னை மற்றும் குஜராத் அணிகள் விளையாடும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைத்தது.
இதன்பின், 215 ரன்கள் வென்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி 3 மூன்று பந்துகளில் 4 ரன்களை அடிக்க, மழை பெய்து ஆட்டத்தை தாமதப்படுத்தியது. மழை நின்ற பிறகு மைதானத்தில் அதிக தண்ணீர் ஆக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு மீண்டும் தாமதமானது.
ஒருவழியாக போட்டி தொடங்கிய நிலையில் சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் டிஎல்எஸ் (DLS) முறைப்படி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருந்தும் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் ஜடேஜா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் ஐபிஎல்லில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.
இதற்கிடையில் மழைபெய்து வந்த மைதானத்தின் ஈரத்தை உலர்த்துவதற்கு களப்பணியாளர்கள் கடுமையாக போராடி வந்தனர். அவர்கள் மைதானத்தை சரி செய்வதற்கு பஞ்சு மற்றும் அயன்பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி உலர்த்திவந்தனர். இது தற்பொழுது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், ஐபிஎல் 2023 லீக்கிற்கான பட்ஜெட் ரூ.87 கோடி, இந்த மைதானத்தை உலர்த்த 80 ரூபாய் ஹேர் ட்ரையர் என்றும், மற்றொருவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐயுடன் ஒப்பிட்டு இசிபி-ஐ விட பிசிசிஐ 728% பணக்காரர் என்பதை நினைவில் கொள்ளவும் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும், ஒருவர் அவுட்ஃபீல்ட் ஈரமாக உள்ளது, ஹேர் ட்ரையரைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கேலி செய்துள்ளார்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …