தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி ! ஆண்ட்ரூவின் சதம் வீணானது..!

Published by
அகில் R

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இரண்டாவது போட்டி மேற்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய  அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாட்டை தொடங்கி ரன்களை சேர்த்தனர் அவ்வப்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் நிதானமான ஆட்டத்தையே  வெளிப்படுத்தியது.

இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திவான் மரைஸ் 65 ரன்களை எடுத்திருந்தார். மேற்கு இந்திய அணியின் தரப்பில் நாதன் சீலி 3 விக்கெட்டும், தேஷான் ஜேம்ஸ் மற்றும் நாதன் எட்வர்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ

பின்னர் 286 இலக்கை எட்டினால் வெற்றி பெறலாம் என களமிறங்கத்தியது மேற்கு இந்திய அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தட்டு தடுமாறி விளையாடியது. இதனால் 73-5 என்று பரிதாபமாக இருந்தது. பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். மேற்கு இந்திய அணியின் ஜூவல் ஆண்ட்ரூ  சதம் விளாசி மறுமுனையில் போராடினார். வெற்றியின் அருகாமையில் சென்ற போது எதிர்பாராத விதமாக அவரது விக்கெட்டும் விழுந்தது.

இருப்பினும் அவர் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 130 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும்  அணி  இழந்து  254 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் குவேனா மபகா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்யாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.

 

 

Published by
அகில் R

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

8 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago