2-வது டெஸ்ட்: இந்தியாவிற்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா..!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே நேற்று முதல் 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோகித் 39 ரன்கள், சுப்மன் கில் 36 ரன்கள், விராட் 46 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் நந்த்ரே பெர்கர், லுங்கி நிகிடி , ரபாடா தலா 3 விக்கெட்டை பறித்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்கள் முன்னிலையில் இருந்நிலையில், தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடங்க வீரர்களாக டீன் எல்கர் , ஐடன் மார்க்ராம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் டீன் எல்கர் 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , டேனி டி ஜோர்ஜி தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், முதல் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 62 ரன்கள் எடுத்து களத்தில் ஐடன் மார்க்ராம் 36*, டேவிட் பெடிங்கம் 7* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே களத்தில் இருந்த டேவிட் பெடிங்கம் 11 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மார்கோ ஜான்சன் மட்டும் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒன்றை இலக்கில்  ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து இழந்தனர். அதன்படி  கேசவ் மகாராஜ் 3,  ககிசோ ரபாடா 2, லுங்கி நிகிடி 8 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் ஐடன் மார்க்ராம் மட்டும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 103 பந்தில் சதம் விளாசி 106 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இதனால் தென்னாபிரிக்க அணி 78 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி  தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது. இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டையும், முகேஷ் குமார் 2 விக்கெட்களையும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும்  பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

41 minutes ago
”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago