டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் பித்தலாட்டம் வெளியானது.. ஷாக் வீடியோ..!

Published by
murugan

 மூன்றாவது டெஸ்ட் போட்டிஸ் ஸ்மித் செய்த காரியம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இந்திய, ஆஸ்திரேலிய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இந்நிலையில், பொதுவாக பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஸ்டம்புகளை மறைக்கும் வகையில் தங்களுக்கு ஏற்ப ஸ்டம்பிற்கு முன் தங்களது கால்களை  வைத்து கோடு போட்டு விளையாடுவார்கள். இதை கார்ட் என்று கூறப்படுகிறது. இந்த கார்ட் மூலம்  எல்பிடபிள்யூ, போல்டை தவிர்க்க உதவுகிறது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் பண்ட் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதைப் பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் அவரை திசை திருப்ப பிரேக் நேரத்தில், ரகசியமாக ஆடுகளத்தில் வந்து பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை நீக்கி விட்டு, ஸ்மித் தனது காலால் பக்கத்தில் இன்னொரு கோட்டை போட்டு வைத்தார். பண்ட்  குழப்ப  அடையவேண்டும் வேண்டும் என்பதற்காக ஸ்மித் இதை செய்துள்ளார்.

இருப்பினும், பந்த் பின்னர் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​அம்பயரிடம் மீண்டும் அடையாளத்தை மாற்றி அமைக்க சொன்னார்,  ஸ்மித்தின் இந்த மோசமான செயலைப் பார்த்த பிறகு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் வீரரின் முகம் தெளிவாகக் தெரியவில்லை, ஆனால் அவரது ஜெர்சி எண் 49 தெரியவந்தது.  ஸ்மித் அணிந்துள்ளது ஜெர்சி எண் 49 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் புஜாரா, பண்ட் இருவரும் கூட்டணி அமைத்து 148 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரிஷாப் பந்த் 118 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாப் பந்த் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார் அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். புஜாரா 205 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.

Published by
murugan
Tags: INDvAUSSmith

Recent Posts

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

5 minutes ago
சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

47 minutes ago
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

18 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago