SLvsIND : சமீபத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான சுற்று பயணத்தொடர் தொடங்கப்பட்டது. அதில் முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்றது. அந்த தொடரில் 3 போட்டிகளையும் அபாரமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.
இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது இன்றைய நாளில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதை பிசிசிஐ தங்களது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.
மேலும், அவருடன் விராட் கோலி, ரிஷப் பண்ட், இந்திய அணியில் இணைவார்கள் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கொண்டு நடைபெற உள்ள 2 ஒருநாள் தொடரும் அதே மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தனது பயிற்சியின் கீழ் இந்திய அணியை முதல் டி20 தொடரை வெற்றி பெற செய்துள்ளார்.
தற்போது அவர் எப்படி ஒருநாள் தொடரை கை ஆழ போகிறார் என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. இலங்கையில், முன்னாள் வீரரான ஜெயசூர்யா தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால், இலங்கை அணியிலும் பல மாற்றங்கள் நடைபெறலாம்.
மேலும், இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்திய அணி சற்று வலு நிறைந்த அணியாக உள்ளதால் இந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…