2-வது இன்னிங்ஸில் சுப்மன் கில் காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்கவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அஸ்வின் 4, சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.
இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில், 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கவில்லை.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யும் போது சுப்மன் கில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் முழுமையாக குணமடையவில்லை. எனவே சுப்மன் கில் களம் இறங்கவில்லை என தெரிவித்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…