2-வது இன்னிங்ஸில் சுப்மன் கில் காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்கவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அஸ்வின் 4, சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.
இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில், 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கவில்லை.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யும் போது சுப்மன் கில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் முழுமையாக குணமடையவில்லை. எனவே சுப்மன் கில் களம் இறங்கவில்லை என தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…