15-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில், டைவ் அடித்து கேட்ச் பிடித்து எவன் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். முதல் ஓவரை முகமது ஷமி வீசிய நிலையில், கே.எல்.ராகுல் கோல்டன் டக் ஆனார்.
அதனைதொடர்ந்து தனது மற்றொரு ஓவரில் டி காக்-ன் விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில், 3-ம் ஓவரை வருண் ஆரன் வீசினார். 3-ம் பந்தில் அவர் எவன் லீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். வரும் வீசிய பந்தை எவன் மிட்-ஆப் திசையில் வேகமாக அடித்தார். அந்த பந்து பவுண்டரி செல்லும் என எதிர்பார்த்த நிலையில், பந்தை நோக்கி ஓடி, டைவ் அடித்து பந்தை பிடித்து எவன் விக்கெட்டை வீழ்த்தினார், சுப்மன் கில். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியம் அடைந்து, அதுதொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், 1983-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கபில் தேவ் பந்தை பின்னோக்கி ஓடி பிடித்தார். தற்பொழுது இந்த கேட்ச், அதேபோல இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…