இந்திய அணிக்காக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மூன்றாவது அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார். டி20 போட்டியில் இந்தியா 12வது தொடர் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் 5 ரன்னில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை விக்கெட்டை துஷ்மந்த சமிரா வீழ்த்தினார். டி20 போட்டியில் ரோஹித்தின் விக்கெட்டை 6 முறையாக சமிரா வீழ்த்தியுள்ளார். சஞ்சு சாம்சன் (18), தீபக் ஹூடா (21) , வெங்கடேஷ் அய்யர் (5) ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
2 -வது போட்டி போல நேற்றைய போட்டியிலும் கடைசிவரை விளையாடி ஸ்ரேயாஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஷ்ரேயாஸ் 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு சாதனை படைத்தது.
டுவென்டி 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணிகள் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனையை இந்திய அணி நேற்று சமன் செய்துள்ளது. இந்நிலையில், விராட் கோலிக்குப் பிறகு டுவென்டி 20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று 50 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றார்.
விராட் 2012 (இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), 2014 (தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் 2016 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் 50 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 174.35 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இலங்கைக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்ரேயாஸ் 57 *, 74 * மற்றும் 73 * எடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2016-ஆம் ஆண்டு 199 ரன்கள் எடுத்த விராட்டின் சாதனையை ஸ்ரேயாஸ் முறியடித்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் உலகின் மூன்றாவது பேட்ஸ்மேன் ஆனார். முன்னதாக, டேவிட் வார்னர் 2019 இல் இலங்கைக்கு எதிராக 217 * ரன்களும், ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா சத்ரான் 2016 இல் UAE க்கு எதிராக 104 * ரன்களும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…