டிஎன்பிஎல் தொடரின் இன்றைய DGD vs Trichy போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.15 மணியளவில் தொடங்கிய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திண்டுக்கல் அணியில் சிவம் சிங், விமல் குமார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில் விமல் குமார் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின், பாபா இந்திரஜித் களமிறங்க, அதிரடியாக விளையாடிய சிவம் சிங் அரைசதத்தை தவறவிட்டு 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆதித்யா கணேஷ் உடன் பாபா இந்திரஜித் இணைந்து நிதானமாக விளையாடினார்.
இறுதியில் சுபோத் பதி மற்றும் ஆதித்யா கணேஷ் களத்தில் இருக்க, 14.5 ஓவரில் 122 ரன்கள் எடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 46 ரன்களும், பாபா இந்திரஜித் 22 ரன்களும், ஆதித்யா கணேஷ் 20* ரன்களும் குவித்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…