சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. 16.1 ஓவரின் போது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.மழையால் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வேல் 46,லின் 37 , ஸ்டோய்னிஸ் 31 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 2, கலீல் அகமது,பூம்ரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் இந்திய அணி 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் மட்டும் 77 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தவான் 77 ரன்கள் எடுத்ததால் சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்த ஆண்டில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்தார். அவர் இந்த ஆண்டில் இதுவரை 16 போட்டிகளில் 648 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 641 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…