ரெய்னா இடத்தில் இவர்தான் இறங்க வேண்டும்… ஷேன் வாட்சன்..!

Default Image

இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.

மேலும் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த பிரச்சனைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார், மேலும் தற்பொழுது ரசிகர்களுக்கு மத்தியில் ரெய்னாவின் இடத்தில யார் இறங்குவர் என்று கேள்வி எழும்பியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது சென்னை அணியில் ரெய்னா இடத்தை நிரப்புவது என்பது மிக கடினமான விஷயம் ஒன்றுதான். ஏனென்றால் இதுவரை ஐபிஎல் போட்டியில் அதிகமாக ரன்கள் அடித்த கிரிக்கெட் வீரர்களில் இரண்டவது இடத்தில உள்ளார்.

மேலும் என்னுடைய கருத்து ரெய்னாவின் இடத்திற்கு முரளி விஜய்யை களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நான் யோசிக்கிறேன். முரளிவிஜய் சுழற்பந்து வேகப்பந்து இரண்டையும் மிகவும் சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்