ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு – அவரது நண்பர் பகிர்ந்த உருக்கமான தகவல்!

Published by
Edison

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். வார்னேவுக்கு, உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு,இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தனர்.

அதே சமயம்,கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார்.

இந்நிலையில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது பழைய கிரிக்கெட் ஜெர்சியை பரிசாக அளித்து,ஆஸ்திரேலிய பாரம்பரிய சிற்றுண்டி உணவான வெஜ்மைட்டை சாப்பிட்டு, இறப்பதற்கு முன் ராவல்பிண்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியை கடைசி மணி நேரத்தில் பார்த்ததாக தி ஸ்போர்ட்டிங் நியூஸ் இணையதளத்தின் தலைமை நிர்வாகியும், வார்னேவின் நீண்டகால நண்பருமான டாம் ஹால் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”வார்னேவும் கிரிக்கெட்டும் தொலைவில் இருந்ததில்லை.அந்த வகையில்,தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் நகரில், 52 வயதான வார்னே  ‘தாய்லாந்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நாம் எப்படிப் பார்க்கலாம்;ஆட்டம் தொடங்கப் போகிறது? என்று கூறினார்.இதனையடுத்து,திடீரென்று அவர் மாரடைப்பால் காலமானார்.எனவே,வார்னேவின் மரணத்தில் அசாதாரணமான சூழலும் இல்லை.

இதற்கிடையில்,ஷேன் கடந்த ஒரு வருடமாக தி ஸ்போர்ட்டிங் நியூஸில் என்னுடன் பணிபுரிந்தார், 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்டின்போது அணிந்திருந்த பழைய கிரிக்கெட் ஜெர்சியை பரிசாக அளித்தார். மேலும்,அவரது 2008 ஐபிஎல் ஜெர்சி மற்றும் ஒரு நாள் சர்வதேச ஜெர்சி மற்றும் தொப்பி ஆகியவை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள TSN அலுவலகங்களில் வைக்கப்படும்.”என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

47 minutes ago
பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago
டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago