இந்திய அணியில் கிரிக்கெட் வீரரான முஹமது ஷமி, ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்வீட் செய்த அஸ்வின், “தேங்க்ஸ் டா தம்பி.. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனால் 2020-ல் இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து முஹமது ஷமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துக்கள், அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். குறிப்பாக, ரஹானே, பும்ரா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோரின் விளையாட்டை நான் ரசித்து பார்த்தேன். அடுத்த போட்டிக்காக காத்திருக்கின்றேன்.” என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்வீட் செய்த அஸ்வின், “தேங்க்ஸ் டா தம்பி.. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் ஷமியை நக்கலாக கலாய்த்த இந்த பதிவு, நெட்டிசன்கள் பார்வையில் பட, அவர்கள் இதனை ட்ரெண்ட் செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக, “அவர் ஹிந்தியில் கூறியதால் நாங்கள் தமிழில் பதிலளித்துள்ளோம்.. கணக்கு சரியா போச்சி” என்ற கமண்டும் வைரலாகி வருகிறது.
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…