இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி திடீர் பல்டி!என்னால் இனி சேர்ந்து வாழ முடியாது…..

Published by
Venu

காவல் நிலையத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான்  புகார் அளித்துள்ளார். மேலும் ஷமி மீது மேட்ச்ஃபிக்ஸிங் குற்றச்சாட்டையும் அவர் கூறினார். இதனால் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தன் மீதான புகார்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முகமது ஷமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

மேட்ச்ஃபிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டை பிசிசிஐ உள்ளிட்ட அமைப்புகள் தீர விசாரிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதில் பலருடைய வாழ்க்கை அடங்கியுள்ளது.

என் வாழ்க்கையைக் காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். காப்பாற்ற ஒரு சதவிகித வாய்ப்பிருந்தாலும் அதற்காகப் போராடினேன். ஆனால் என்னை நீதிமன்றத்தில் சந்திப்பதாக ஹாசின் சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கை தொடரும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. என் மனைவியிடம் பேச என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அனுப்பினேன். ஆனால் நாங்கள் இணைந்து வாழவேண்டும் என்று அவர் ஒரு சதவிகிதம் கூட நினைக்கவில்லை. கடும் முயற்சிகள் எடுத்தபிறகுதான் இதைச் சொல்கிறேன். இனி நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்கிற நம்பிக்கையில்லை.

என் சகோதரர் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறுகிறார். அன்றைய தினம் என் சகோதரர் என் வீட்டிலேயே இருக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு.

நாங்கள் திருமணம் செய்தபோது ஹாசினுக்கு முதல் திருமணம் நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. மெல்ல மெல்ல தான் அதுபற்றி என்னிடம் கூறினார். அவருடைய இரு பெண் குழந்தைகளையும் அவருடைய சகோதரியின் குழந்தைகள் என்று கூறியிருந்தார். எங்கள் குடும்பமும் அதை நம்பியது என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago