தொடர் மழை…!இந்திய அணி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன்  அணியுடனான முதல் நாள் ஆட்டம் ரத்து…!

Default Image

இன்று இந்திய அணி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன்  அணியுடனான முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது .

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.

இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை அடைந்தது .இதனால் இந்திய அணி 3 வது போட்டி மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் கோலி 61 ,கார்த்திக் 22 ரன்களுடன் இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளது.இதற்கு முன்னால் இன்று  கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் மோத இருந்தது.இந்த போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்