டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த வீரர்கள்..! யார் யார் தெரியுமா..?

Published by
murugan

ஆசிய கோப்பை விளையாடிய அணி:

உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு உலகக்கோப்பைக்கு முன் விளையாடிய ஆசிய கோப்பை அணிகளில் இருந்து மாற்றங்களைச் செய்யாமல் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற ருதுராஜ் கெய்க்வாட், முதல் மூன்று டி20 போட்டிகளில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி 2 டி20 போட்டிகளில்  துணைக் கேப்டனாக அணியில் சேர உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டி20 ஐ அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக  இந்த டி20 ஐ தொடரில்அவர் விளையாடவில்லை.

மூத்த வீரர்கள் புறக்கணிப்பு:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பெரும்பாலான மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தத் தொடருக்கான இளம் அணியை அறிவித்ததுள்ளது எனவும் இந்த தொடரில்  யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குழு அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றிலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அவேஷ் கான்., முகேஷ் குமார்.

Published by
murugan
Tags: INDvAUS

Recent Posts

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…

20 minutes ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…

54 minutes ago

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…

1 hour ago

“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய ⁠எம்.எஸ்.பாஸ்கர்.!

 சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…

1 hour ago

‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…

2 hours ago

“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…

3 hours ago