Gautam Gambhir , Ravichandran Aswin , IPL2024 ,
சென்னை : இந்தியன் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர், ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் இந்திய அணியின் தேர்வுகளை பற்றி சில தெளிவுகளை விளக்கமளித்து பேசி இருந்தார்.
இந்தியா அணியின் ஜாம்பவானான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூடியூப் சேனலில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரான கவுதம் கம்பிருடன் பேசி இருந்தார். அதில் நிறைய கிரிக்கெட் விஷயங்களை இருவருமே பரிமாறி கொண்டனர். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வை குறித்து கவுதம் கம்பிர் பேசி இருந்தார்.
அவர் இதை பற்றி கூறுகையில், “டி20 அல்லது ஐபிஎல்லைப் பார்த்து உங்கள் 50 ஓவர் அணியை நீங்கள் ஒருபோதும் தேர்ந்தெடுக்கக்கூடாது. அதே போல டி20 உலகக்கோப்பை மற்றும் டி20க்கான இந்திய அணியை ஐபிஎல்லில் இருந்து நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். விஜய் ஹசாரே டிராபியில் இருந்து நீங்கள் 50 ஓவர் கிரிக்கெட்டுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்கள் டெஸ்ட் அணியை முதல் தர கிரிக்கெட்டில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது தான் மிகவும் எளிமையானது.
எத்தனை இளைஞர்கள் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்கள் என்பது தான் எனக்கு பெரிய கவலை. இந்தியாவுக்காக விளையாட ஐபிஎல் குறுக்குவழியாக நிரூபிக்கப்படாது என்று நான் நம்புகிறேன். இன்றைய காலக்கட்டத்தில், சர்வதேச டி20 அணிகளைப் பார்க்கும்போது அவர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது, இரண்டு, மூன்று அணிகளைத் தவிர, பல அணிகளால் இந்தியாவின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாது.
எனவே, இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டை விட ஐபிஎல் போட்டி மிகுந்ததாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். எங்கள் உள்நாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் ஐபிஎல் விளையாட விரும்பும் விதம், டி20 கிரிக்கெட்டுக்கு அவர்கள் தயாராகும் விதம், டி20 கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துவதாக நான் நினைக்கிறேன்”, என்று ‘குட்டி ஸ்டோரிஸ் வித் ஆஷ்’ என்ற அஸ்வினின் யூடியூப் நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…