பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் “விரைவில் அனைவரையும் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பிலே-ஆப்ஸ் சுற்று, நேற்று அபுதாபியில் நடந்தது. இதில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவரில் 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, நாளை நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அணியில் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், ஏற்று, இறக்கங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளோம். இது ஒரு யூனிட்டாக எங்களுக்கு ஒரு சிறந்த பயணம் என கூறிய அவர், வெற்றி எங்கள் வழியில் செல்லவில்லை என கூறியுள்ளார். விஷயங்கள் தங்களிடம் செல்லவில்லை எனவும், ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்கள் அன்பு எங்களை பலப்படுத்துகிறது. விரைவில் அனைவரையும் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…