டி20I: நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியும் மோதியது.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் செயின்ட் லூசியா டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியானது ஸ்காட்லாந்து அணிக்கு ஒரு மிகமுக்கிய போட்டியாகும்.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரண்டன் மேக்குல்லன் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டை எடுத்து அசத்தி இருந்தார்.
அதனை தொடந்து இலக்கு எட்ட ஆஸ்திரேலியா அணி பேட்டிங் களமிறங்கியது. அதன் படி சற்று தடுமாறினாலும், தக்க நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் (68 ரன்கள்), ஸ்டொய்னிஸ் (59 ரன்கள்) என அடித்ததால் ஆஸ்திரேலியா அணி வெற்றியை பெற்றது.
அதிலும் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், த்ரில்லராக சென்ற அந்த ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதனால், 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 186 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் B பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால், இங்கிலாந்து அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…