இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை வெளியானது..!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி  மூன்று டெஸ்ட் மற்றும்  மூன்று ஒருநாள் போட்டிககளில் விளையாடவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா..? என்ற கேள்வி எழுந்தது. பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தென் ஆப்பிரிக்கா அணியுடனான   டி20 தொடர் ஒத்திவைப்பதாகவும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி  மூன்று டெஸ்ட் மற்றும்  மூன்று ஒருநாள் போட்டிககளில் விளையாடவுள்ளது. இந்த போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும், இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும்,  மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி  23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Published by
murugan

Recent Posts

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

32 minutes ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

1 hour ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

1 hour ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago