தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில் இன்று கடைசி போட்டி தொடங்கியது. நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, 3-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை தந்தனர்.
சற்று நிதானமாக விளையாடி வந்த புஜாரா 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் ஒருபுறம் கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால்ம் மறுபுறம் தென்னாபிரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதிகபட்சமாக கோலி 79 ரன்களை அடித்து அவுட்டானார். இறுதியாக 77.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் ககிசோ ரபாடா 4, மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…